பஞ்சரத்தின சஞ்சீவி ஐங்கூட்டு கற்ப மூலிகை!!

No comments
                                 பஞ்சரத்தின சஞ்சீவி ஐங்கூட்டு கற்ப மூலிகை!!

       இம்முறை மிக பழங்காலத்து முறை!மிக சக்தி வாய்ந்த காய கற்பம்
நாம் முன்னோர்கள் கையாண்ட கற்ப சக்தியுடைய மூலிகைகள்.

1, சீந்தில் கொடி,  2, சிவகரந்தை, 3, கீழாநெல்லி, 4, அரிசி திப்பிலி,5, வசம்பு.
போன்ற மூலிகைகளாகும்.இதில் சீந்தில்கொடி கோடைகாலத்தில்
சேகரிக்கப்பட வேண்டும். சிவகரந்தை நல்ல குளிர்காலத்தில் மட்டும்
கிடைக்ககூடியது. கீழாநெல்லி மழைகாலத்தில் தான் பசுமையாக
கிடைக்கும்.அதில்தான் நிறைய சத்துக்கள் தேங்கி நிற்கும். சீந்தில்கொடி
கோடைகாலம் [ சித்திரை, வைகாசி ] தவிர மற்ற நாட்களில் சேகரிப்பது
பயன் தராது. எனவே இம்முறைப்படி பஞ்சரத்தின பற்பம் தயாரிப்பவர்கள்
கவணிப்பது முக்கியமாகும். மேலும் அந்த இந்த காலங்களில் மூலிகை
களை சேகரிப்பதில் இன்னொரு கவனிப்பும் உண்டு அதாவது கடற்கரை
யோரங்களில் உப்பு காற்றுப்பட்டு வலரும் சீந்தில்கொடி, சிவகரந்தை,
கீழாநெல்லி, ஆகியவ பயன்படாது. 

   எனவே இவைகளையெல்லாம் கவனித்து இம்மூன்றையும் சேகரித்து
கல், மண், நீக்கி சுத்தம் செய்து தனி தனி இடித்து பொடிசெய்துவைத்துக்
கொள்ளவேண்டும்.அடுத்து திப்பிலியும், வசம்பும் நல்ல சத்து உள்ளதாக
நாட்டு மருந்து கடைகளில் வாங்கிக் கொண்டு அவைகளையும் தனிதனியே இடித்து தூள் செய்து  வஸ்திரகாயம் செய்து வைத்துக் 
கொள்ளவும். இந்த ஐந்து வகையான வேற்படி தூளில் சேர்த்து நன்றாக
சேர்த்து கலந்து வைத்துகொள்ளவும்.

                  இது பஞ்சரத்ன சஞ்சீவி கல்பம் ஆகும். 

உபயோகம்: சிறுவர் முதல் முதியவர்கள் வரையிலும் சாப்பிட்டு 
வரக்கூடிய அமிர்தமாகும். 1, அரிசி எடை சிறுவகளுக்கும், 2 முதல் 
3, அரிசி எடை பெரியோர்களுக்கும் தேனில் தினம் ஒரே வேளை
காலையில் குழைதுண்டு வரவேண்டும்.இப்படி 40, 80, 120, நாட்கள்
தேனில் சாப்பிடவேண்டும்.




     இதனால் இளைத்து துரும்பான உடம்பு பலம் பொருந்தியாகும்.
பருமனாகவும் ஆகும். ந்வீன நாகரிகத்தால் சினிமா, காதல், கண்ட
படி காம உணர்ச்சிகளைத் தூண்டி உடலைப் பாழ்படுத்திக் கொண்டவர்
களுக்கும். அளவுக்க மிஞ்சிய போகத்தால் நாடி நரம்புகள் தளர்ந்து
இளமை வயதிலேயே முதியவர் போல் காட்சியளிக்கும் வாலிபர்
களுக்கும்,இரத்தம் குறைந்தவர்களுக்கும்,அறுவை சிகிச்சைக்குப்
பிறகும் ரத்தப் போக்கால் உடல் சோகையாகி விட்டவர்களுக்கும்.
இது ஏற்ற சமய சஞ்சீவியாகும்.

    மேலும் சக்தியே இல்லாத பசி எடுக்காத சிறுவர்கள் உடம்பு
தேராமல் வளர்ச்சியே இல்லாத சிறுவர்களுக்கும் 1, அரிசி எடை
தேனில் கொடுத்து வருவது மிக்க பயன்தரும்.ஞாபகசக்தியே
இல்லாதா ஆண், பெண் இருபாலரும் இதனை முறைப்படி சாப்பிட்டு
நல்ல குணம்பெறலாம்.

    ஆனால் இந்த பஞ்ச ரத்தின சஞ்சீவி கல்பம் சாப்பிடுவோர் புகை, 
புகையிலை, பொடி, தாம்பூலம், அகத்திகீரை, சிறுகீரை, கடுகு மாமிச
உணவுகள் போதை தரும் லாகிரி குடிவகைகள், வெளியிடங்களில்
சேர்க்கை போன்றவகைகள் இல்லாமல் இருப்பின் எந்த காரணத்
திற்காக கல்பம் சாப்பிட ஆரம்பிகிறோமோஅதுவரையில் மேற்க்
கண்ட பத்தியம் இருப்பது அவசியமாகும்.

    இந்த பத்தியம் மேற்கண்ட ஒரு முறைக்குதான் என்று தவறாக என்ன
வேண்டாம்.  சக்தி தரும் சஞ்சீவி மூலிகைகள்  என்ற நூலில் கண்டுள்ள
அனைத்து முறைகளுக்கும் என்பதை ஞாபகத்தில் வைத்தல் வேண்டும்.



 
                                                    
        கூடிய வரையில் இந்த சக்தி தரும் சஞ்சீவி மூலிகைகளில்
எல்லாவித நோயாளிகளுக்கும் அவரவர் நோய்களுக்கு ஏற்றவாறு
நோய்களை போக்கிக் கொள்ளக்கூடிய கற்ப சஞ்சீவி மூலிகைகளை
அறிமுகப்படுத்தியதுடன் இம் மூலிகைகளை நோயே இல்லாதவர்
களும் கூட வரும் முன் காப்போம் என்று பயன்படுத்தி பலன் அடைய
லாம். குறிப்பாக டயாபடீஸ் என்னும் நீரிழிவு நோயில் உள்ள
பலஹீனத்தை போக்க ஒரு சக்தி தரும் மூலிகையை அறிமுகம்
செய்ததாக வைத்துக்கொள்ளுங்கள். சிறுவர் முதல் பெரியவர்கள்
வரை  ஆண், பெண் இருவருமே நோயின்றி இருக்கும் போதும்
சக்தி தரும் பொருளாக்கிக் கொள்ளலாம்.






     






     இந்த சஞ்சீவி என்ற பெயரே வேறு இதரவித கெடுதல் செய்யாது. 
உடலுக்கும் ஊறு வினைவிக்காது. உயிருக்கும் பயந்தரக் கூடியதாகும்.
வாசக அன்பர்கள்  சக்தி தரும் மூலிகைகளை சமயோசித புத்தியுடன்
கையாண்டு  எல்லாம் வல்ல முருகன் அருள் பெற்று நீண்ட வாழ்நாள்
பெற்று இன்பமுடன் வாழ்வார்களாக!!!  


                               
        
                                              வாழ்க சஞ்சீவி மூலிகைகள்!!!

No comments :

Post a Comment