நத்தைச்சூரியின் மருத்துவமும்,ஆச்சரிய செயல்களும்!!!
herbalkannan
1/26/2014 08:52:00 PM
உடல் எடை குறைக்க / அதிகரிக்க
,
காய கற்பம் / நோய் எதிர்ப்பு சக்தி
No comments
நத்தைசூரி ( Nathaichoori )
இதன் அருகில் நத்தை சென்றால் அதன் ஓடு வெடிக்கும்
இயற்க்கையின் கொடையான புல், பூண்டு, செடி,கொடி,மரம் போன்ற அனைத்தும் மனிதர்களுக்கும்,விலங்குகளுக்கும் பயன்படுகிறது. இவற்றில் பல நோய்கள் தீர்க்கும் குணம் கொண்டவைகள்.சித்தர்கள் இவற்றை மூலிகை மருத்துவமாக கொண்டு பல விதமான் நோய்களை குணமாக்கிவந்துள்ளனர்.மேலும் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியையும், வழுவையும், நீண்ட அயுளையும் கொடுக்க கூடிய கற்ப மூலிகைகளின் ஒன்று.
சிததர்கள் கண்டறிந்த அறிய வகை மூலிகைகளின் ஒன்று நத்தைசூரியாகும் இம்மூலிகை மருத்துவ பயன்பாட்டிற்க்கும்.அதிசய ஜாலங்கள், மற்றும் சித்துக்கள் செய்வதற்க்கும் உதவும் மூலிகை.நத்தைச்சூரியில் மூன்று இனம் உள்ளது என்று ஆதிவாசிகள் கூறுகிறார்கள்.அவை ஒன்று கொடி இனம் மற்ற இரண்டு செடி இனம்.கொடிவகையை சேர்ந்த மூலிகையின் தன்மை, ஆட்கள் அதன் அருகில் அறியாமல் சென்றாலே சாட்டை அடித்ததுபோல் அடிக்கும்.என்று சொல்கிறார்கள்.மேலும் வன
விலங்குகள் அந்த அறிய மூலிகைகள் இருக்கும் இடத்திற்க்கு அருகில் செல்லாதாம்.
இப்படிபட்ட சக்தி வாய்ந்த நத்தைச்சூரி வேரை அவர்கள் தாயத்தில் அணிந்தால் வனத்தில் உள்ள மிருகங்களும் விலகி செல்லும் தீய சக்திகளும் அண்டாது என்றும் தற்போது உள்ள மனிதர்கள் மறைமுகமாக செய்யும் பில்லி, சூனியம், ஏவல் போன்ற செயல்கள் செய்தாலும் தன்னை தாக்காமல் சூரம் பன்னும் சூரிதான் நத்தைசூரி என்று கூறுகிறார்கள். இந்த கொடிவகையான நத்தைசூரியின் புகைபடம் விரைவில் வரும், இதே போன்ற தன்மையுடைய ஒட்டுபலா என்ற அறிய மூலிகையும்.இந்த வனத்தில் உண்டு , இந்த மூலிகைகளின் அருகில் மனிதர்களும் விலங்குகளும் சென்றால் சடிர் என்று ஒட்டும். ஒட்டிய இடத்தில் தீ புண் போல் ஆகிவிடும், இதன் வடிவம் பேயத்தி இலைகள் போன்று இருக்கும். இதன் அருகில் நாம் அமர்ந்து இருந்தால் கொடிய விலங்கும் கூட வராது,
செடிவகைஉள்ளநத்தைச்சூரி.விலங்குகளுக்கும்,பறவைகளுக்கும்
மனிதர்களுக்கும், அதன் அருகில் இருக்கும் தாவரங்களுக்கும்.ஒரு அரிய உணவாக பயன்படுகிறது.இந்த அறிய தாவரம் செம்மண் கானும் நிலங்களில் அதிகமாக காணப்படுகிறது. இந்த தாவரத்தின் விதையை அதிகமாக் விரும்பி சாப்பிடும் பறவைகள் காடை, கவுதாரி, புறா போன்ற பறவைகள் உண்பதால் இதன் உடல் கட்டு அழகாகவும் காணப்பட்டு நரம்பு எழும்பு தசைகளும் இரும்பு போல காணபடுகிறது.
இதை சாப்பிடுவதால் அவற்றுக்கு போகசக்தி மிக அதிகமாகி அதன் வீரியம் அதிகரிப்பதையும். கண்டறிந்தை மனிதர்கள் தனக்கும் இந்த போக சக்தியும் ஆண்மையும் அதிகரிக்கவேண்டும்.என்று இந்த பறவை களை வேட்டையாடி சாப்பிட ஆரம்பித்தார்கள் அதனால் இந்த பறவை இனமே குறைந்து வருகிறது.
சித்தர்கள் கூரிய மஹா மூலிகைகளின் ஒன்று நத்தைசூரி உலகத்தில் உள்ள மூலிகை எல்லாவற்றிக்கும் சாபம் உண்டு ஆனால்
நத்தைசூரி என்கிற மூலிகைக்கு மட்டும் சாபம் நிபர்த்தி தேவையில்லை. இந்த நத்தைச்சூரியை பிடுங்கி வந்து உலர்த்தி நன்றாக சூரணம் செய்து அதனுடன் பணங்கற்கண்டு சேர்த்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் அதிக வலிமை உண்டாகும்.
நத்தைசூரி விதையை தண்ணீர்விட்டான் கிழங்கு சாறும், பசும்பாலும் சேர்த்து கொதிக்கவைத்து இந்த விதையை புட்டவியல் செய்து உலர்த்தி பவுடராக்கி பணங்கற்கண்டுடன் சேர்த்து தினமும் சாப்பிட்டு வர நீண்ட நெடுங்காலம் நோயின்றி வாழலாம் என்கிறார்கள்.அத்துடன் அனைத்து சித்துக்களும் உண்டாகும். இதே போன்று தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் வேறு எந்த கற்ப மருந்தும் தேவை படாது. வியாதிகளும், எதிரிகளும் நெருங்காமல் காத்துகொள்ளும்.
இந்த நத்தைசூரியை முன்னோர்கள் நமது கிராமங்களில் நத்தைசூரியும், கருப்பட்டியும் சேர்த்து தேத்தண்ணீராக குடித்து வந்தார்கள் என்று கேள்விப்பட்டோம். இதே போன்று நமது தளத்தில் உள்ள வாசகர் திரு, C.ராஜேஷ் அவர்கள் ஈட்டாமொழி போஸ்ட், க்ன்னியாகுமரி மாவட்டம் ( குருப் 1 பயிற்சியாளர் ) என்னை சந்திக்க
வந்தார். நான் எனது மூலிகை தோட்டத்திற்க்கு அழைத்து சென்றேன்.
அவர் அங்குள்ள நத்தைசூரியையும், ரோமவிருட்சத்தையும் பார்த்து
மகிழ்ச்சியடைந்தார்
இந்த நத்தைச்சூரியை பார்த்து எனது தாத்தா,பாட்டி,
இந்த நத்தைசூரியின் விதையை காலையில் கொதிநீரில் போட்டு தேத்தண்ணீராக குடித்தனர்.இதை அருந்தும் போது டீ, காபி போன்றவை அருந்தக்கூடாது என்றார்கள்.இந்த முறையை பயன்படுத்திய அவர்கள்நோயின்றி உடலை வழுவாக வைத்து பாட்டியும்,தாத்தாவும் 100 வயதிற்க்கு மேலும் தங்களுடைய உதவிக்கு ஊண்டுகோல்யின்றி வாழ்ந்தார்கள் என்று கூறினார்
மேலே குறிப்பிட்டபடி இந்த அபூர்வ நத்தைசூரியை சாப்பிட்டு வர
உடல் சூடு தணிந்து சீரணசக்தி அதிகரிக்கும். பிராய்லர் கோழி அடிக்கடி சாப்பிடுவதால் ஏற்ப்படும் ஊளைச்சதையை இருக்கும்.இரத்தகுறைவினால் ஏற்படும் உடல் பருமனையும் குறைக்கும், சவ்வு தேய்வினால் உண்டாகும் வலிகள் தீரும்.பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்ப்படும் குறுக்கு வலியை சரிசெய்யும். தாய்மார்களுக்கு தாய்பால் அதிகரிக்கும்
கேன்சர் நோயாளிகளுக்கும், எய்ட்ஸ் நோயாளிகளுக்கும் இதை கொடுத்து வந்தால் எலும்புருக்கி நோய்கிருமியை சரிசெய்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நோய் கிருமிகளின் வீரியத்தை குறைக்கின்றது. இப்படி பல நன்மைகளை செய்யக்கூடியவைதான்
மஹா மூலிகையான நத்தைச்சூரி என்வே உடல் ஆரோக்கியமாக
இருக்கவும் நீண்ட நாள் நோயின்றி வாழ இதனை பயன்படுத்தி பயன்
பெறுங்கள்!!!
.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment