அனைத்து வகையான ஜுரம் சளி ஜலதோசம் போக்கும் மூலிகை நிவாரணி - குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவருக்கும்!
பள்ளிகள் திறந்து விட்டன,குழந்தைகள் ஆர்வத்துடன் புதிய வகுப்பறையையும், பழைய புதிய நண்பர்களையும் சந்திக்க பள்ளி செல்லும் நேரமிது!
புதிய சூழலில் , சில தொற்றுக்கிருமிகளின் காரணமாக ஜலதோசம்,காய்ச்சல் போன்றவை சாதாரணமாக வரலாம்.அதனால், குடும்பத்தில் உள்ள மற்ற குழந்தைகள்,பெரியவர்களுக்கும் ஜுரம் பரவும் வாய்ப்பும் அதிகம்.ஆரம்பத்திலேயே,பள்ளிக்கு விடுப்பு,மற்றும் மருத்துவ செலவு, இது போன்ற சூழ்நிலைகளில், நாம் இத்தகைய நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால், மேற்குறிப்பிட்ட இன்னல்களைத் தவிர்க்கலாம்.
ஜுரமோ,ஜலதோசமோ , அதன் அறிகுறியை நாம் அறிவோம், அக்கணங்களில், உடனே, நமது ஜுர ஜலதோச மூலிகை நிவாரணியைப் பெரியவர்களாக இருந்தால், இரண்டு கொட்டைப்பாக்களவு, சிறியவர்களாக இருந்தால் , ஒரு கொட்டைப்பாக்களவு என்ற அளவில் காலை மாலை இருவேளை சாப்பிட்டு வர, எத்தகைய விஷ ஜுரமாக இருந்தாலும், சளித்தொல்லையாக இருந்தாலும், உடனே நிவர்த்தி கிடைக்கும். சளியை விரட்டியடிக்கும், ஜுரத்தை வெளியேற்றும். மேலும் ஜுரமோ ,ஜலதோசமோ வந்தபின், இந்த மூலிகை நிவாரணி விரைவில் அவற்றை நீக்கி,உடல் நலனை சீராக்கும், அத்துடன், ஜுரத்துடன் வரக்கூடிய, உடல் வலி,தலைவலி,இருமல் போன்ற அனைத்து வகை தொந்தரவுகளையும் , நீக்கிவிடும்.
சளி,ஜலதோசம்,தலைவலி காய்ச்சல் போக்கும் அற்புத மூலிகைகளான கண்டங்கத்திரி, தூதுவளை, அதிமதுரம், துளசி,திரிகடுகம் எனப்படும் சுக்கு ,மிளகு,திப்பிலி சேர்ந்த அருமருந்து கலவை, சித்தரத்தை, ஆடாதொடை, கற்பூரவள்ளி, விஷ்ணுகிராந்தி மற்றும் எத்தகைய கடும் ஜுரத்தையும் விரைவில் குணமாக்கும் நிலவேம்பு முதலான மூலிகைகளுடன் ஒரு அரிய பற்பமும் சுத்தமான மலைத்தேனில் பனங்கற்கண்டுடன் சேர்த்து உருவாக்கப்பட்ட மூலிகை மருந்து தான் , நமது ஜுரம் ஜலதோசம் போக்கும் மூலிகை நிவாரணி!
Subscribe to:
Post Comments
(
Atom
)
Sila naatkalaaka ninaiththu kondiruthen kaaichalukku ethenum siththa marunthu undaa ena.. udane pathivu vanthu vittathu:). veetil avasiam irukka vendiya marunthu..
ReplyDeleteMikka nandri aiyaa.
திரு.தனபால் அவர்களே!
ReplyDeleteதங்களைப்போன்றே, நண்பர் பலர், பள்ளிகள் திறக்கும் முன்னரே, நம்மிடம் கேட்டுக்கொண்டே இருந்தனர், காய்ச்சல்,ஜலதோசம் வருமுன்னரே, தடுக்க மூலிகைகள் வேண்டும் என, சில மூலிகைகள் சேகரிப்பு ,பதப்படுத்துதல் தாமதமானதால், அப்போதே பதிவிட முடியவில்லை.
உலகாளும் ஈசன் கருணையினாலும், எமை வழிநடத்தும் சித்தர் அருளாலும், இப்போது பதிவிட வாய்ப்பு கிடைத்தது.
உங்கள் பதிவிற்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!
எல்லோரும் நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கிறோம்!
என்றும் அன்புடன்,
ஹெர்பல் கண்ணன்.
Iyya ivai pondra mooligai maruthugal kidaikum idangalai ingu kuripidavum
ReplyDeleteதிரு.ஃபாதிக் அவர்களே!
ReplyDeleteஇந்த மருந்தும் பிற மருந்துகளும் தேவைப்படுவோர்க்கு தற்போது நாம் கூரியர் மூலம் அனுப்பி வைக்கிறோம்.
என்றும் அன்புடன்,
ஹெர்பல் கண்ணன்.