மூலிகை ஹேர் ஆயில் - முடி உதிர்வை 10 நாட்களில் நிறுத்தும்

7 comments



          
          தலைமுடி உதிர்தல்,இன்று அனைவரையும் சற்றே, மன வருத்தம் கொள்ள வைக்கும் ஒரு பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது, மாறி வரும் வாழ்க்கைச் சூழல் ,உணவுமுறை , கல்விக்கூட கடும் பயிற்சியினாலும்,பணியிட அதிக வேலைச்சுமையாலும் ஏற்படும் மன அழுத்தம் மற்றும் தவறான பழக்க வழக்கங்களின் காரணமாகவும், முடி உதிர்தல் ஏற்படுகிறது.

அதிக முடி உதிர்வே, பின்னர் வழுக்கையாக மாற்விடுகிறது, இத்தகைய மோசமான நிலையை வருமுன்னரே , சரிசெய்ய, தலைமுடியைக்காக்க, நமக்கு ஏராளமான தீர்வுகள் காணக்கிடைத்தாலும், பக்க விளைவுகள் இல்லாததும், நிரந்தர தீர்வு தருவதுமான ஒரு மருந்து அதுவே, நம் மகாசித்தர்கள் அருளிய அரிய மூலிகைகள்அடங்கிய எண்ணையாக இருந்தால், நாம் நிச்சயம் தலைமுடி உதிரும் கவலையின்றி,வாழலாம்.

அப்படி ஒரு மூலிகைத் தலைமுடி எண்ணை தான், சதுரகிரி ஹெர்பல்ஸ் ஹேர் ஆயில்.
  
மஞ்சள்கரிசாலை,வெள்ளைகரிசாலை,மருதாணி,செம்பருத்தி,நாய்க்கரித்தான் பட்டை,குமிழம்பட்டை,கற்றாளை,குமிழம் பழம்,செங்கடுக்காய் பூ, வெட்டிவேர் மற்றும் பல அரிய மூலிகைகள் கலந்து இந்த ஹேர் ஆயில் தயார் செய்யப்படுகிறது.

இந்த ஹேர் ஆயிலை ஆண் பெண் இரு பாலரும் தலையில் ஊரவைத்து தேய்த்து, சற்று நேரம் கழித்து குளித்து வர, தலைமுடி உதிர்தல், இளநரை, போன்றவை நீங்கும். 

பொடுகு:
                    சிலருக்கு தோலில் எண்ணைத்தன்மை இருப்பதால், ஒருவித பூஞ்சை கிருமிகள் தொற்றால், தலையில் வெள்ளைச்செதில்களாக பொடுகு உண்டாகும்.

இந்தப்பொடுகு, தலை வாரும் போது முதுகு,பின் கழுத்து இவற்றில், வெள்ளைச்செதிலாக உதிரும். அரிப்பு அதிகமாக இருக்கும். பொடுகு அதிகமாக பள்ளி,கல்லூரி மாணவியரைப்பாதிக்கும். மாணவிகள் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் தலை அரிப்பால்,பெரிதும் சிரமப்படுவர்.இதனால் விழாக்கள் மற்றும் பொது இடங்களில், தலை அரிப்பால், இயல்பாக இருக்க முடியாமல்,மிகவும் அவதிக்குள்ளாவர்.
இந்த பொடுகு ஆண்களையும் , விட்டு வைப்பதில்லை.

தலையில் அரிப்பைத்தூண்டி, தலைமுடியையும் சமூக வாழ்வையும் சிரமத்திற்குள்ளாக்கும், இத்தகைய கொடிய பொடுகை, நம்முடைய சதுரகிரி ஹெர்பல்ஸ் ஹேர் ஆயில் , அற்புதமாக செயல்பட்டு, அறவே ஒழித்து விடும். முறையாக உபயோகித்து வர,விரைவில் பலன் கிட்டும்!

காலையில் , தலை முடியின் வேர் வரை ஹேர் ஆயில் நன்கு  தடவி, சில மணிநேரம் ஊற வைத்து, பின் குளித்து வர வேண்டும்.

மேலும் தலைமுடி உதிர்ந்த இடத்தில் விரைவில் முடி முளைக்கும்.
இந்த ஹேர் ஆயில் உபயோகித்த ஒரு வாரத்தில், முடி உதிர்தல் நிற்கும்.

இத்தகைய அற்புத நற்பலன்கள் தருவதும், பொது இடங்களில் நமது கவுரவம் காப்பதும், நம் தலைக்கு காவலாய் இருக்கும் , தலைமுடி காக்கும் சதுரகிரி ஹெர்பல்ஸ் ஹேர் ஆயில் , வீடு தோறும் அவசியம் இருக்க வேண்டிய ஒரு அரு மருந்து தானே!


                                                             
                                                      
                   

7 comments :

  1. திரு.கண்ணன் சார் மூலிகை ஹேர் ஆயில் அற்புதமான அறிய வகையான ஒன்று சார் நீங்கள் கூறியது போல நானும் என் சக தோழிக்கும் கொடுத்து வந்தேன் அவளுக்கு முடி உடைதல்,முடிகொட்டுதல்,போன்ற பிரச்சனைகள் உள்ளது இப்பொழுது அந்த தொந்தரவு முற்றிலும் இல்லவே இல்லை மிக்க நன்றி.


    சரவணன்
    திருச்சி

    ReplyDelete
  2. திரு.சரவணன் அவர்களே!

    ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவான முடி பிரச்னைகளாக இன்று மாறிவிட்ட, அதிக முடி உதிர்தல்,பொடுகு போன்ற பிரச்னைகளுக்கு இந்த மூலிகை ஹேர் ஆயிலை உபயோகித்து, நல்ல பலன்களை அவர்கள் உணர்ந்துள்ளனர். மேலும், இளநரையை விரைவில் குணமாக்குவதால் ஆடவர் பெண்டிர் என அனைவரும் நாடும் ஒரு அவசியத் தலைமுடி வளர்ச்சி எண்ணையாகிவிட்டது , சித்தர்களின் திருவுளக்குறிப்புகளின் படி தயாரான
    நமது மூலிகை ஹேர் ஆயில்!
    தங்கள் பதிவிற்கு மிக்க நன்றி!
    என்றும் தங்கள் அன்பில்,
    ஹெர்பல் கண்ணன்.

    ReplyDelete
  3. திரு கண்ணன் சார் மூலிகை ஹேர் ஆயில் அற்புதமான ஒன்றுதான். நானும் என் குடும்பத்திலும் உபயோகித்து வந்ததில் நல்ல பலன் கிடைத்தது. 10 நாளிலேயே முடி கொட்டுவது முற்றிலுமாக நின்றுவிட்டது. மிக்க நன்றி.

    ReplyDelete
  4. மிக்க மகிழ்ச்சி திரு.கணேஷ்வேல் நாகப்பன் அவர்களே!
    முடி கொட்டுவது நின்று விட்டாலும், நிரந்தர தீர்வு கிடைக்க தொடர்ந்து சிறிது காலம் உபயோகித்து வாருங்கள்.

    அன்புடன்,
    ஹெர்பல் கண்ணன்.

    ReplyDelete
  5. வணக்கம் திரு கண்ணன் அய்யா, தாங்கள் கொடுத்த மூலிகை பவுடர் மற்றும் ஹேர் ஆயில் பயன் படுத்தி என் மகளுக்கு முடி உதிர்வது 10 நாட்களிலேயே நின்று விட்டது மிகவும் அருமையான பலன் இதனை எனது நண்பர்கள் அனைவருக்கும் சொல்லி இருக்கிறேன் மிக்க நன்றி - ஜோதிஷ ஆதித்யா பள்ளத்தூர் அரு.சண்முகம் - சென்னை - 98840-88806/91711-85755.

    ReplyDelete
  6. அய்யா திரு.A.R.ஷண்முகம் அவர்களே!
    சித்த மூலிகை மருந்துகள் அவரவர் உடல் நிலைக்கேற்ப , நோயின் தன்மைக்கேற்ப கால அவகாசம் எடுத்துக்கொண்டு சரி செய்யும், காலம் சற்று கூடுதல் ஆயினும் நிரந்தர பலன்கள் கொடுக்கும்.தங்கள் மகளின் முடி உதிர்தல் பிரச்னை குறுகிய நாட்களில் சரியாகி விட்டதில் எமக்கும் மிக்க மகிழ்ச்சி!
    நாம் கருவி! நடத்துபவன் இறைவனே!

    என்றும் அன்புடன்,
    ஹெர்பல் கண்ணன்.

    ReplyDelete
  7. இந்த என்ணெய் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.நான் பரிந்துரை செய்கிறேன்.முடி உதிர்வது முளுமையாக நின்றுவிட்டது.உங்கள் சேவை தாெடர வாள்த்துகிறேன்

    ReplyDelete